shadow

ரூ.10 கோடி கடன்: லதாரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

கோச்சடையான திரைப்படத்திற்கு வாங்கிய ரூ.10 கோடி கடனில் ரூ.8.5 கோடி கடனை லதா ரஜினிகாந்த் திருப்பி தரவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்? என்று இன்று மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்றைய விசாரணையின்போது கெடு விதித்துள்ளது.

ஆட்பிரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடி கடனில் ரூ.8.5 திருப்பி தரவில்லை என பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று மதியத்திற்குள் லதாரஜினி பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளார். ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் இந்த வழக்கு அவருக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply