ஐபிஎல் 2017. முதல் போட்டி ஐதராபாத் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி நேற்று ஐதராபாத் நகரில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் வார்னர் 14 ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து விளையாடிய தவான், ஹெண்ட்ரிகுயீஸ், யுவராஜ்சிங் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். குறிப்பாக யுவராஜ்சிங் 27 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதனால் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது.
208 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் யுவராஜ்சிங் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 2 புள்ளிகளை பெற்று முன்னிலை வகிக்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.