ரிசார்ட்டில் திடீரென காணாமல் போன தினகரன் ஆதரவாளர்
அதிமுகவின் தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் தங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் ரிசார்ட்டில் இருந்து திடீரென தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ காணாமல் போய்விட்டதாகவும், அவர் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
புதுவை ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க தினகரன் வரவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்று கவர்னர் மறுத்துவிட்டதால் இப்போதைக்கு சட்டமன்றம் கூட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
எனவே இனியும் ரிசார்ட்டில் தங்கியிருந்தால் பிரயோஜனமில்லை என்று எம்.எல்.ஏக்கள் கருதி வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் நேற்று காலை சொகுசு விடுதியை விட்டு வெளியே சென்றார். அவரிடம் நிருபர்கள் கேட்ட போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்திக்கப் போவதாக கூறினார். ஆனால் வேறு எதுவும் பேச மறுத்து விட்டார். அவர் தினகரனை சந்திக்க சென்றாரா? அல்லது தனது ஊருக்கு சென்றாரா? என்பது பற்றி தெரியவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.