சூரியனில் கருந்துளைகள்: பூமிக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டதா?
சூரியனில் புதியதாக கருந்துளைகள் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பூமியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சூரியக் குடும்பத்தின் மையமாகவும், ஒட்டுமொத்த மண்டலத்திற்கும் ஒளியையும், வெப்பத்தையும் அளிக்கும் ஆற்றல் மையமாக திகழ்வது சூரியன். அதில் 74,560 மைல் அகலம் கொண்ட ’சூரிய கோட்டை’ எனப்படும் பெரிய கருந்துளைகளை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஏ.ஆர் – 2665 என்று பெயரிடப்பட்டுள்ள அப்பகுதி, புவியை விட 19 மடங்கு பெரியது. இது சூரியக் கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்று தெரிவித்துள்ளனர். இந்த சூரியப் பகுதி விரைவாக வளர்ந்து வருவதாகவும், அதன்மூலம் உருவாகும் காந்த ஆற்றலின் அளவும் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து கொடிய கதிர்வீச்சுக்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஞ்ஞானிகள், சூரியன் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டனர். சூரிய கோட்டைப் பகுதியில் இருந்து வரும் கொடிய கதிர்வீச்சுக்கள், புவியில் உள்ள தாவரங்களையும், உயிர்களையும் அழிக்கும் சக்தி கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்மூலம் புவியின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வி பரவத் தொடங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.