கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் தலைவர் மகள் பிரியங்கா காந்திக்கும், மேனகா காந்தியின் மகன் வருண் காந்திக்கு சொற்போர் நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்த குடும்ப சண்டை குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி, “பிரியங்கா காந்தி தண்ணி அடித்துவிட்டு உளறுகிறார்” என்று பேசியதால் காங்கிரசார் பயங்கர கோபம் கொண்டுள்ளனர். டெல்லியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமியின் இல்லத்தை காங்கிரஸார் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் பிரியங்கா காந்தி, வருண்காந்தி, காந்தி குடும்ப நெறிமுறையில் இருந்து விலகி, தவறான பாதையை தேர்வு செய்து விட்டார்” என்று தாக்கி பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த வருண்காந்தி, “நான் அமைதியோடு இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்கக் கூடாது. பிரியங்கா தனி நபர் தாக்குதலை கைவிட்டு, வேலைவாய்ப்பு, ஊழல், ஏழ்மை பற்றி விவாதிக்க வேண்டும்” என்று தனது சகோதரிக்கு பதில் கூறினார்.
இவர்களுக்கு கருத்து மோதல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, “பிரியங்கா காந்தி ஆல்கஹால் சாப்பிட்டிருப்பார் போலும். அதனால்தான் இவ்வாறு பேசி வருகிறார். அவருடைய இந்த பேச்சு அவருக்கும், அவரது கணவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறினார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.