ரஜினியுடன் போனில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி: என்ன பேசினார்கள்?
பெரியாரை அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசிவிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியாரின் ஆதரவாளர்களின் கோரிக்கையை நிராகரித்த ரஜினிகாந்த், ‘மன்னிப்பு கேட்க முடியாது’ என நேற்று தெளிவாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் ரஜினி தனது நிலையில் உறுதியாக இருந்தால் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினி இதுகுறித்து தன்னிடம் போனில் பேசியதாகவும், அவரிடம் இந்த விவகாரத்தில் முழு ஆதரவு தெரிவித்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்த ஒருவரே ரஜினிக்கு தானாக முன்வந்து ஆதரவு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.