சுபாஷ்கரனின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் இரண்டு இயக்குனர்கள்
பிரிட்டனில் தொழில் அதிபராக இருந்து வரும் தமிழரான சுபாஷ்கரன் அவர்கள் லைகா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி பல வெற்றிகரமான தமிழ் படங்களை தயாரித்து வருகிறார்
இந்த நிலையில் அவர் தொழிலில் சந்தித்த வெற்றிகள் தோல்விகள் மட்டும் பல சுவராசியமான அனுபவங்களை வைத்து அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
சுபாஷ்கரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதாகவும், முதல் பாகத்தை மணிரத்னம் அவர்களும், இரண்டாம் பாகத்தை ஏஆர் முருகதாஸ் அவர்களும் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
ஆனால் மணிரத்னம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கவிருப்பதால் இந்த படம் இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்தே தொடங்கும் என்று தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.