தூத்துக்குடி வல்லநாடு பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷை மாண்வர்களே கல்லூரி வளாகத்தில் கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் மாண்வர்கள் ஏன் கொலை செய்தோம்? என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவர்கள் வாக்குமூலம் வருமாறு:
எங்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் தண்டனை வழங்குவார். 5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். நாங்கள் 3 பேரும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை எங்களால் கட்டமுடியவில்லை.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு
டேனிசையும், பிரபாகரனையும் சஸ்பெண்டு செய்தார். பெற்றோரை அழைத்து வந்தால்தான் கல்லூரியில் சேர்ப்பேன் என்று கூறியதால், 2பேரும் கல்லூரிக்கு பெற்றோரை அழைத்து வந்தனர். அப்போது பெற்றோர் முன்பு 2பேரையும் அவதூறாக பேசினார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி என்னை சஸ்பெண்டு செய்தார். இது பற்றி கேட்ட போது, மாணவிகளை கேலி செய்ததால் சஸ்பெண்டு செய்துள்ளேன் என்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது பெற்றோரையும் அழைத்து அவர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தினார். இது பற்றி நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனிடம் கூறினேன். அப்போது பெற்றோர் முன்பு அவமானபடுத்திய கல்லூரி
முதல்வர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி நேற்று காலை கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றோம். கல்லூரி வளாகத்திற்குள் சென்ற போது அங்கு வந்த சுரேஷ் என்னை பார்த்து கடுமையாக திட்டினார். மேலும் என்னை படிக்க வைக்க விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனுடன் சேர்ந்து சுரேஷை சரமாரியாக வெட்டினோம். இதில் அவர் இறந்து விட்டார். கல்லூரி ஊழியர்கள் சேர்ந்து எங்கள் 3பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார். இதே கருத்தை மற்ற மாணவர்களும் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.