10ஆம் வகுப்பு மாணவருடன் தலைமறைவாகிய நெல்லை ஆசிரியை பிடிபட்டார்.
கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான 16 வயது சுந்தர் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை கோதை லட்சுமியும் காதலித்து வந்ததாகவும், இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தலைமறைவாகியதாகவும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து மாணவர் சுந்தரின் பெற்றோர்கள் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் காதல் ஜோடியை கடந்த 11 மாதங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் ஆசிரிய கோதை மற்றும் மாணவர் சுந்தர் ஆகிய இருவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததை கண்டிப்பிடித்த போலீசார் அவர்கள் இருவரையும் மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
நாளை இருவரும் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியையுடன் ஓடிப்போன சுந்தர் வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பணத்தையும் எடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.