shadow

சிவகங்கையில் மாணவர் ஒருவர் ஆசிரியரை கத்தியால் குத்தியதால் ஆபத்தான நிலையில் ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூர் என்ற பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஜாய்சன் என்ற மாணவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் ஓவிய ஆசிரியர் ராஜ் ஆனந்த் என்பவர் அந்த மாணவனின் செல்போனை பிடுங்கி முதல்வரிடம் ஒப்படைத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஜாய்சன் ஆசிரியர் ராஜ் ஆனந்த் உடலில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயம் பட்ட ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஜாய்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.