மக்களவையில் அமளியில் ஈடுபடும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஆட்சி போல வேடிக்கை பார்க்க முடியாது. அத்தைகைய எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, தேவைப்பட்டால் விதிமுறைகள் மாற்றப்படும் என மக்களவை சபாநாயகர் சுமித்ர மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “நாட்டு மக்களின் குறைகளை போக்குவதற்காகத்தான் மக்களவை கூடுகிறதே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒருவர் மிது ஒருவர் திணித்துக்கொள்வதற்காக அல்ல. மக்களவையில் நிறைவேற இருக்கும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குழப்பம் ஏற்படுத்தும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஆட்சி போல வேடிக்கை பார்க்க மாட்டோம்.
தேவைப்பட்டால் விதிமுறைகளை திருத்தி, அமளியில் ஈடுபடும் எம்.பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து சட்டங்களையும் இயற்ற அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.