shadow

சென்னையில் ஸ்டாலின் போராட்டம், பழநியில் துர்கா ஸ்டாலின் முருக வழிபாடு

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் மறியல் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் பழநியின் முருகனை வழிபாடு செய்துள்ளார்

வரும் 31ஆம் தேதி பழநியில் தைப்பூச திருவிழா நடைபெறுவதை அடுத்து சென்னையில் இருந்து பழனிக்கு வந்த துர்கா ஸ்டாலின், ரோப் கார் மூலம் மலைக் கோயில் சென்று முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து போகர் மற்றும் கைலாசநாதர் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்த துர்கா ஸ்டாலினுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலினுடன் திமுக பிரமுகர்கள் சித்தனாதன் சன்ஸ் ரவீந்திரன், மெர்சி செந்தில்குமார், இந்திரா திருநாவுக்கரசு ஆகியோர் வந்திருந்தனர்.

பகுத்தறிவு கொள்கையை கடைபிடிக்கும் கருணாநிதி குடும்பத்தினர்களில் துர்கா ஸ்டாலின் மட்டுமே கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply