shadow

3வது அணியில் திமுக இணையுமா? ஸ்டாலின் பேட்டி

நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரக்ளை சந்தித்து பேசியபோதிலும், 3வது அணியில் திமுக இணைவது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை

தெலுங்கானா முதல்வரின் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

அரசியல் சூழ்நிலைகள் குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் என்னிடம் விவாதித்தார். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி போன்றவற்றை குறித்து இருவரும் விவாதித்தோம்.

ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசினோம். இது முதற்கட்ட சந்திப்பு, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இது குறித்து பேச உள்ளேன். அரசியல் சூழ்நிலை குறித்தும், எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடன் ஆலோசனை நடத்தினேன்.

Leave a Reply