shadow

shadow

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது.  திரளான பக்தர்கள் தேரின் வடகயிறை பற்றி இழுத்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா, கடந்த, 10ம் தேதி அதிகாலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கண்ணாடி அறையில் நம் பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது.கடந்த, 11ம் தேதி, நம்பெருமாள்  கண்ணாடி அறையில் இருந்து, பல்லக்கில் புறப்பாடும், கற்பகவிருஷ வாகனத்தில் சித்திரை வீதிகள் வலம் வருதல் நடக்கிறது. மூன்றாம் நாள், சிம்ம  வாகனத்தில் நம்பெருமாள் வலம் வந்தார். நான்காம் நாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து, தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு, நம்பெருமாள் சி த்திரை வீதிகளில் வலம் வந்தார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக, சித்திரை தேர் மண்டபத்தில் காலை, 4.30 மணி முதல், 5.15 மணிக்குள் மீன லக்னத்தில்  சுவாமி தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. காலை, 6 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடிக்க.  தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Leave a Reply