தொலைஞ்சு போங்கடா!!! டுவிட்டரில் ஸ்ரீப்ரியா குறிப்பிடுவது யாரை?
சமீபத்தில் ஐநா நிகழ்ச்சி என்று கூறப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்தை நடத்தினார். அவருடைய நடனத்தை பரதம் தெரிந்தவர்கள் முதல் பாமரர் வரை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியுடன் பல படங்கள் நடித்த நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் கூறியபோது, ‘திறமையான, அனுபவம் மிக்கவர்களுக்கு ஏன் மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்று தெரியவில்லை. நீங்கள் செல்வாக்கு உள்ளவர்களாக மாற சிபாரிசு தேவைப்படுகிறது. தொலஞ்சிப்போங்கடா.. என்று டுவீட் செய்துள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர், இதை ரஜினியிடம் சொல்லலாமே என்று கேட்டதற்கு, ரஜினியிடம் ஏன் சொல்லவேண்டும், அரசு தான் இதனை செய்ய வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் தன்னுடைய டுவீட் யாரையும் குறிப்பிட்டு கூறுபவை அல்ல என்றும், எம்.எஸ்.வி , நாகேஷ் போன்ற திறமையானவர்கள் மதிக்கப்படவில்லை என்ற அர்த்தத்தில் தான் கூறியதாகவும், இந்த டுவீட்டை தவறாக வேறு யாருக்கேனும் எதிராக பயன்படுத்த வேண்டாம் என்றும் ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.