இலங்கையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில்,”‘இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும், இலங்கை உள்பட எந்த நாட்டுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடாமல் உடனடியாக அவர் இந்தியா திரும்புவார். பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அரசு அதிகாரி ஒருவர் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், “இந்த விவகாரம் குறித்து டெல்லியிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம், இந்த வாரத்துக்குள் தகவல் வருமென்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது”. இந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.