கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அறிவிப்பு
இலங்கை கடற்படையினர்களால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக உள்பட பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்ட 19 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நீதிமன்ற காவல் முடிந்து மீண்டும் 19 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நல்லெண்ண அடிப்படையில் 19 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.