shadow

இன்று ராமேஸ்வரத்தில் ஸ்ரீதேவி அஸ்தி கரைப்பு

கடந்த மாதம் 24ஆம் தேதி மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் கடந்த புதன்கிழமை ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவரது அஸ்தி ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படவுள்ளது.

இதற்காக போனிகபூர், ஜான்விகபூர், குஷிகபூர் ஆகிய மூவரும் நேற்று சென்னை வந்துள்ளனர். இன்று காலை அவர்கள் ராமேஸ்வரம் சென்று ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்கவுள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கோலிவுட்டின் நாயகியாகி, பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் அஸ்தி, கடைசியில் தமிழக கடலில் கரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply