shadow

cricketஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று முதல் நாக்-அவுட் முறையிலான காலிறுதி போட்டிகள் துவங்கியுள்ளதால் போட்டிகள் விறுவிறுப்பை அடைந்துள்ளது.

இன்றைய முதல் காலிறுதியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.  சங்கரகரா 45 ரன்களும், திரெமென்னே 41 ரன்களும் எடுத்துள்ளனர். கேப்டன் மாத்யூஸ் 19 ரன்கள் எடுத்துள்ளார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கூட எடுக்கவில்லை. இதில் தில்ஷன் உள்பட மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற 134 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென்னாப்பிரிக்க பேட்டிங் செய்யவுள்ளது.

Leave a Reply