இலங்கை – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி. மூன்றே நாளில் முடிந்துவிடுமா?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 34.2 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களளயும் இழந்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியவும் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 2.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் இருக்கும் நிலையில் ஒரே நாளில் இந்த போட்டியின் முடிவு தெரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.