ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப சிறப்பு பெளர்ணமி பூஜை
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாகவும் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளது என்றும் செய்திகள் வருகின்றன.
இந்நிலையில் மக்கள் பிரார்த்தனையால் மறு பிறவி எடுத்துள்ளதாகவும், நான்கு தொகுதிகளுளும் அதிமுக-வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தமிழக மக்களுக்குஅதிமுக மருத்துவமனையில் இருந்தபடியே அறிக்கை ஒன்றை ஜெயலலிதா நேற்று விடுத்துள்ளார்.
இந்நிலையில் நோயில் இருந்து விடுபட்டுள்ள முதல்வர் விரைவில் வீடு திரும்ப இன்று அப்பல்லோ மருத்துவமனை முன் கூடிய அதிமுக தொண்டர்கள் சிறப்பு பௌர்ணமி பூஜை நடத்தினர். இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.