shadow

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற வங்கிகள் கூடுதல் நேரம் செயல்படுமா?

bankரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவதற்கு வசதியாக வங்கிகள் கூடுதல் நேரம் செயல்படும் என்றும் இதற்கென தனி சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை இந்த சிறப்பு கவுண்டர்கள் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் தயாராக உள்ளதாகவும் இந்த நோட்டுக்கள் வரும் நாளை முதல் விநியோகிக்கப்படும் என்ரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்தார்.

Leave a Reply