shadow

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் டெண்டர் முறைகேடு வழக்குகளின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நாளை பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.