shadow

mla suicideஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரபல ஓட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கடந்த ஞாயிறு அன்று மரணம் அடைந்தார். அவர் தற்கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில் அவரது மரணம் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

மரணம் அடைந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., அனார் சிங் திவாகர, .டெல்லியை சேர்ந்த 5 பேர்களிடம் ரூ.350 கோடி ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டதாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அவருடைய கடித்ததை அவர் மரணம் அடைந்த ஓட்டல் அறையில் இருந்து போலீஸார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, திவாகர் மரணத்திற்கான மர்மம் விலகியுள்ளது.

Leave a Reply