shadow

தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் ஜியன் ஹை கைது

தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்ற பார்ஜ் கியன் ஹை என்பவர் தனது தோழியால் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவியிழந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு அவர் திடீரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவரிடம் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படும் என்றும், 20 நாட்கள் சிறைக்காலம் முடிந்தபிறகு, வழக்கு விசாரணை நடத்தி, அதன் முடிவாக, உரிய தண்டனை விதிக்கப்படும் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரிய அரசியல் வரலாற்றில், முதல் பெண் அதிபராக, 4 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான பார்க் ஜியன் ஹை முதன்முதலில் சிறை சென்ற அதிபர் என்ற சிறுமையையும் பெற்றுள்ளார்

Leave a Reply