shadow

cricket srஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதி போட்டி எந்தவித விறுவிறுப்பும் இன்றி நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி ஒரேயடியாக தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர் ஆகி, 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணி 18 ஓவர்களில் 0
134 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றாது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை கனவுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி இன்று ஏற்பட்ட தோல்வியால் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

Leave a Reply