உலக நாயகன் கமல்ஹாசனுக்காகவும், அவரது குடும்பத்தினர்களுக்காகவும் நேற்று கோச்சடையான் சிறப்புக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார் படத்தின் இயக்குனரும், ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் கேன்ஸ் படவிழாவுக்கு சென்றிருந்ததாலும், உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததாலும், கோச்சடையான் திரைப்படத்தை அவர் பார்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று கமல்ஹாசனுக்காக சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் செளந்தர்யா ர்ஜினிகாந்த்.
தனது நெருங்கிய நண்பர் ரஜினியின் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த கமல்ஹாசன், இந்தியாவில் கோச்சடையான் திரைப்படம் ஒரு புதிய முயற்சி என்றும், எதிர்கால சினிமா, மோஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில்தான் இருக்கும் என்றும் கூறினார். கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை மற்றும் ரஹ்மானின் இசையை வெகுவாக பாராட்டிய கமல், செளந்தர்யாவின் பணி பிரமிக்கத்தக்கதாக இருந்ததாகவும் கூறினார்.
கமல்ஹாசன் ஆளவந்தான் திரைப்படத்திலேயே இந்த முயற்சியை கையாண்டு வெற்றி பெற்றவர் என்பது அனைவரும் தெரிந்ததே. கோச்சடையான் திரைப்படம் வெற்றி பெற கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும் செளந்தர்யாவை வாழ்த்தினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.