shadow

நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று நேரு குடும்பத்தினர் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல் ஒலித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி குறித்து ஆய்வு செய்ய என்று டெல்லியில் அவசர கூட்டம் கூட உள்ளது

இந்த கூட்டத்தில் நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கௌரவத் தலைவராக மட்டும் இருந்து கொள்ளலாம் என்றும் கட்சியின் தலைமை மற்றும் முக்கிய பொறுப்புக்கு இளைஞர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.