shadow

ராகுல்காந்தியை அடுத்து சோனியா காந்தியையும் காணவில்லை. போஸ்டர்களால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தியை காணவில்லை என்று அவரது சொந்த தொகுதியான அமேதி தொகுதியை சேர்ந்தவர்கள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் நேற்று சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி தொகுதியிலும் சோனியா காந்தியை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவதாலும், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வருவதாலும் அவரது சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதிக்கு அவர் கடந்த சில மாதங்களாக செல்லவில்லை

இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று ரேபரேலி நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த ‘காணவில்லை’ சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. சோனியா காந்தியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply