தமிழகத்தில் எப்போது?
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீடிக்க வேண்டுமென அனைத்து மாநில முதல்வர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஏற்கனவே பஞ்சாப் ஒரிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ள நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலமும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் மேற்குவங்கம் மற்றும் கர்நாடக மாநிலமும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து மேலும் சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவையும் நீட்டித்து உள்ளதால் அந்த பட்டியலில் தமிழகம் சேருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
தெலுங்கானா, ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 30, மகாராஷ்டிரா,
Leave a Reply
You must be logged in to post a comment.