தெர்மல் ஸ்கேனில் இருந்து தப்ப காய்ச்சல் மாத்திரை உட்கொள்ளும் பயணிகள்: இவங்க யாரை ஏமாத்துறாங்க

காய்ச்சலுக்கான மாத்திரை சாப்பிடுவதால் தெர்மல் ஸ்கேனரில் இருந்து வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் தப்பிவிடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அரசை ஏமாற்றிவிட்டு தப்பிப்பதால் இவர்களால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முடியுமா? 14 நாட்கள் சோதனைக்கு உள்ளாவதில் என்ன சிரமம்? இதனால் அவர்களது குடும்பம் மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுமே?

அரசை ஏமாற்றுவதாக நினைத்து காய்ச்சல் மாத்திரை சாப்பிட்டால் நீங்கள் அரசை ஏமாற்றவில்லை, மனித குலத்தையே ஏமாற்றுகிறீர்கள் என்று நெட்டிசன்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர்,

Leave a Reply