shadow

சூரிய ஒளியில் இயங்கக்கூடிய காவல் உதவி மையம்: சென்னை மெரினாவில் சாதனை

சென்னை மெரீனாவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய உதவி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த உதவி மையத்தின் மூலம் சென்னை மெரினாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோல் அதிக சூரிய சக்திகளை இயங்கும் காவல் உதவி மையத்தை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.