கம்ப்யூட்டர் வெடித்து சிதறியதால் மதுரை சாப்ட்வேர் எஞ்சினியர் பரிதாப மரணம்
மதுரை அருகே கம்ப்யூட்டரில் பணி செய்து கொண்டிருந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுரை அருகே மேலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வரும் இவர் நேற்றிரவு கம்ப்யூட்டரில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பணி செய்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது.
இதில் தீக்காயம் அடைந்த ரகுநாதன் பரிதாபமாக பலியானார். இதே வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ரகுநாதனின் தந்தையும் அகால மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வருடத்தில் தந்தை, மகன் இரண்டு பேரும் மரணம் அடைந்தது அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.