shadow

தமிழகத்தில் மழைக்காலம் முடிந்து படிப்படியாக பனிமூட்டம் மற்றும் குளிர் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இன்று சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து குளிர் அதிகரிக்கும் என்றும் பல இடங்களில் பனிமூட்டம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

டிசம்பர் 22ஆம் தேதி வரை உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 22ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.