shadow

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது பண்ணை வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென பாம்பு கடித்தது என்று செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு விஷ முறிவுக்கான மருந்து கொடுக்கப்பட்டது என்றும் தெரிந்ததே.

இந்த நிலையில் சல்மான் கான் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான் கானை கடித்த பாம்பு விஷமற்ற பாம்பு என்று தெரியவந்துள்ளதாக ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.