தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் மர்ம பையில் இருந்து வெளிவந்த புகை.
சென்னை தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் மர்ம பை ஒன்றில் இருந்து, திடீரென புகை கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர்.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்திற்கு அடுத்து இயங்கி வரும் தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையம் எப்போதும் பிசியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று.
இந்நிலையில் இன்று அந்த ரயில் நிலையத்தில் கேட்பாரற்று மர்ம பை ஒன்று கிடந்தது. அதுமட்டுமின்றி அந்த பையில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கியதால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவ கிடைத்தவுடன் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் செல்போனுக்கு சார்ஜ் செய்ய பயன்படுத்தும், 300 பவர் பேங்குகள் இருந்தது தெரியவந்தது. அந்த பவர் பேங்கில் ஒன்று எரிந்ததால்தான், புகை ஏற்பட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
இந்த சம்பவத்தினால் பல மின்சார ரயில்களும், சில பயணிகள் ரயில்களும் தாமதமாகின.
Leave a Reply
You must be logged in to post a comment.