மீண்டும் அண்ணாச்சி கடைக்கு திரும்பிய பொதுமக்கள்: கொரோனாவால் ஏற்பட்ட நன்மை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அண்ணாச்சி கடைக்கு சென்று தான் அனைத்து பொதுமக்களும் வாங்கி வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக மட்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் வைத்துள்ள பெரிய மால்களிலும் ஆன்லைன் ஸ்டோர்களில் மட்டுமே பொருட்களை வாங்கும் வழக்கத்தை பொதுமக்கள் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு உத்தரவு காரணமாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுவிட்டன. சூப்பர் மார்க்கெட்டுக்களும் மூடப்பட்டு உள்ளதால் தற்போது அவசர தேவைக்கு மளிகை பொருட்களை மீண்டும் அண்ணாச்சி கடையில் தான் வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

கொரோனா வைரசால் பலவிதமான கேடுகள் இருந்தாலும் இது போன்ற சின்ன சின்ன நன்மைகளும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply