நேற்று சென்னை சென்ட்ரல், ரயில் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ஒரு பயங்கரவாதி நேற்று கடலூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்டவனின் பெயர் அஷ்ரப் என்றும், வயது 40 என்றும், அவன் ராஜஸ்தானை சேர்ந்தவன், என்றும் போலீசார் கூறுகின்றனர்..
கடலூரில் தங்கியிருந்து சிலீப்பர் ஷெல்லாக அவன் தீவிரவாதிகளுக்கு உதவியாக பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஸ்லீப்பர் செல்லாக மாற்றி அவன் முயற்சி செய்து வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவன் ஏற்கனவே ஜோத்பூர் மற்றும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் என்றும்,தமிழகத்தின் பல பகுதிகளிலும், பெங்களூரிலும் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.கைது செய்யப்பட்ட அஷ்ரப் அலியை மேலும் தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.