shadow

பிளஸ் 2 மாணவர்களுக்கு சமூக அக்கறையுடன் டுவீட் செய்த சிவகார்த்திகேயன்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த வருடம், கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது. எனவே மாணவ, மாணவியர் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனநிலை மாற்றத்திற்கு உண்டாகி தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது என்பதில் அரசும், சமூக நல ஆர்வலர்களும் விழிப்புடன் இருந்து கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூகத்தில் ஒரு நடிகர் ஒரு விஷயத்தை கூறினால் அது விரைவாக சென்றடையும் என்ற வகையில் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சமூக அக்கறையுடன் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தேர்வில் தோல்வியடைஞ்ச எத்தனையோ பேர் வாழ்கையில் பெரிய பெரிய வெற்றிகளை அடைஞ்சுருக்காங்க. பெரிய புகழை குவிச்சிருக்காங்க. தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் கவலைப்படாதீங்க. தவறான முடிவுகளை எடுத்துவிட வேண்டாம் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதேபோன்ற ஒரு கருத்தை நடிகர் சூர்யாவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply