ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு:
ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்கும் கொள்கையுடையவர் சிவகார்த்திகேயன். ஆனால் வேலைக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலும் தயாரானதால் இனிமேல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார்.
அதன்படி தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ‘இன்று நேற்று நாளை ‘ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்னொரு படம் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க, அனிருத் இசையமைக்கின்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.