இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கேபினட் மந்திரி பதவி கொடுத்த சிங்கப்பூர் பிரதமர்
இந்தியாவை சேர்ந்த இந்திராணி ராஜா என்பவரை சிங்கப்பூர் பிரதமர் தனது கேபினட் மந்திரிசபையில் சேர்த்துள்ளார். இதனால் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் பிரதமருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்
இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் 55 வயது இந்திராணி ராஜா கேபினட் மந்திரியாக சிங்கப்பூர் பிரதமரால் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர் என்பதும் இவரது தாயார் சீனாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது மந்திரியாக செயல்படுவார்.
இவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து வகிக்கின்றனர். மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை மந்திரியாக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சா வளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.