shadow

ஜல்லிக்கட்டு பிரச்சனை தீரும்வரை ரோட்டில் உட்கார சிம்பு அதிரடி முடிவு

நடிகர் சிம்பு எந்த விஷயத்தையும் உணர்வுபூர்வமாக துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்துபவர். தமிழன் என்ற உணர்வு அதிகம் உள்ளவர். ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட்டில் இருந்து முதன்முதலில் குரல் கொடுத்ததோடு, தனது வீட்டின் முன் ரசிகர்களுடன் இணைந்து 10 நிமிடம் மெளன போராட்டம் நடத்தியவர்.

இந்நிலையில் சற்று முன் அவர் ஒரு புதிய போராட்டத்தை அறிவித்துள்ளார். இன்று இரவு 8 மணிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே தேர்வு செய்து போராட்டம் நடத்த தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். இந்த போராட்டத்தில் மருத்துவமனை, மருந்துக்கடை ஊழியர்கள் தயவு செய்து கலந்து கொள்ள வேண்டாம் என்றும் போராட்டத்தை மருத்துவமனைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்படி நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு பல வகைகளில் பிரச்சனை கொடுக்க பலர் காத்திருப்பதாகவும், ஆனால் இந்த விஷயத்தை விடப்போவதில்லை என்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செய்தி வரும் வரை அனைவரும் ரோட்டில் உட்கார்ந்து போராடப்போவதாகவும், ஜல்லிக்கட்டு நடக்கும் வரை எழுந்திருக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply