சிம்புவின் ‘AAA’ தோல்வி எதிரொலி: 2ஆம் பாகம் கேன்சலா?
சிம்பு நடிப்பில் கடந்த வெள்ளியன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே படுமோசமான படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. சிம்புவுடன் திரையுலகிற்கு எண்ட்ரியான நடிகர்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் தன்னை புகழும் ஒரு கூட்டத்தை அருகில் வைத்து கொள்ளும் வகையில் சிம்புவின் பாத்திரப்படைப்பு இந்த படத்தில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் இரண்டாவது நாளே படுவீழ்ச்சி அடைந்துள்ளது. சிம்புவின் மிகப்பெரிய தோல்வி படமாக இந்த படம் அமைந்தது மட்டுமின்றி அனேகமாக இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரையுலகை விட்டே வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆம், இந்த படத்தின் நஷ்டம் காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முடிவை தயாரிப்பாளர் கைவிட்டுவிட்டதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.