ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிம்பு-தனுஷ் ஆதரவு
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் தமிழ் பாடல்களை மட்டுமே பாடியதாகவும் இந்தி பாடல்களை அவர் ஒதுக்கிவிட்டதாகவும் வட இந்தியர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பல முன்னணி பாடகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் தனது டுவிட்டரில் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிம்பு கூறியபோது, ‘இசைக்கு மொழி என்பதே கிடையாது. எனவே தான் இசை அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கின்றது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜீனியஸ். இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கவும் என்று கூறியுள்ளார்.
இதே பிரச்சனை குறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த மொழியும் கிடையாது. அவருடைய தாய்மொழி இசையை தவிர வெறு எதூவும் இல்லை. ரஹ்மான் ரஹ்மான் தான் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.