சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை: அதிரடி உத்தரவு
சேலத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என அம்மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் மளிகை கடைகள், சந்தைகள் அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெளியே சுற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.