shadow

‘கபாலி’ ரஜினிக்காக படப்பிடிப்பை நிறுத்திய நடிகை அஞ்சலி

anjaliகடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து நடிகை அஞ்சலி நடிகர் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘பலூன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகையான அஞ்சலி, ‘பலூன்’ இயக்குனர் சினேஷிடம் ‘கபாலி’ ரிலீஸ் தினத்தில் தனக்கு படப்பிடிப்பில் இருந்து விடுமுறை வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இயக்குனர் தினேஷ் அன்றைய தினம் படப்பிடிப்பையே ரத்து செய்து படக்குழுவினர் அனைவருக்கும் விடுமுறையை அரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அஞ்சலி, ஜெய் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் ‘கபாலி’ படத்தை பார்க்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply