அரவிந்த் கெஜ்ரிவால் மீது செருப்பு வீச்சு. வாலிபருக்கு தர்ம அடி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது செருப்பு வீசிய வாலிபர் ஒருவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீஸார் காப்பாற்றி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
00 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நடவடிக்கையை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று அரியானா மாநிலத்தில் உள்ள ரோஹத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியில் கலந்து கொண்டார்.
பேரணியின் முடிவில் அரவிந்த கெஜ்ரிவால் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது விகாஸ் குமார் என்ற வாலிபர் கெஜ்ரிவால் மீது ஷூவை தூக்கி வீசினார். ஆனால் ஷூ அவர் மீது படாமல் மேடையில் விழுந்தது. உடனடியாக அங்கிருந்தது ஆம் ஆத்மி தொண்டர்கள் விகாஸை சூழ்ந்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக போலீசார் தொண்டர்களிடம் இருந்து விகாஸை மீட்டு கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரவிந்த கெஜ்ரிவால் கூறியபோது, ‘கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘மோடி ஒரு கோழை என்று நான் சொல்கிறேன். இன்று சில மோடி ஆதரவாளர்கள் என் மீது ஷூவை தூக்கி எறிந்தார்கள். மோடி அவர்களே, எங்களாலும் இதைச் செய்ய முடியும். எங்களுடைய கலாச்சார மதிப்பு இதுபோன்ற செயலை செய்ய விடவில்லை.
உங்களுடைய சி.பி.ஐ. சோதனை, ஷூ தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மீறி பண ஒழிப்பு ஊழலுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவேன்’’
Leave a Reply
You must be logged in to post a comment.