shadow

உ.பி முதல்வரிடம் இருந்து மற்ற மாநில முதல்வர்கள் பாடம் கற்க வேண்டும். சிவசேனா

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாள் முதல் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவரது பாணியை அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி, .13க்கு மூன்று வேளை உணவு அளிக்கும் திட்டம், பள்ளிகளை விரைவில் அரசுடைமை ஆக்கும் திட்டம், உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் உபி முதல்வர் அனைத்து மாநில அரசுகளுக்கும் முன் மாதிரியாய் திகழ்வதாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் நாளிதழில் வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply