சிறந்த யோகாவிற்கு ஆடை தேவையில்லை: நடிகை ஷில்பாஷெட்ட்
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது ஆடை அணியாமல் யோகா செய்தால் யோகா சிறப்பாக இருக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்தவரும் பாலிவுட் நடிகையும், தொழிலதிபருமான ஷில்பாஷெட்டி தற்போது யோகா நிபுணராகவும் உள்ளார். அவர் யோகா குறித்து இரண்டு புத்தகங்களும் எழுதி இருக்கிறார்.
இவருடைய 2-வது புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ஷில்பாஷெட்டி, விழாவுக்கு வந்தவர்கள் முன்பு யோகா செய்து காட்டினார். அப்போது கூறிய அவர், “விழாவுக்கு நான் அணிந்து வந்திருக்கும் உடையில் யோகா செய்வது கஷ்டம். ஆடை அணிந்து யோகா செய்தால் கால் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்” என்றார்.
அவருடைய இந்த பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. “விழாக்களுக்கு செல்லும் போது அணியும் ஆடை இல்லாமல், யோகா செய்வதற்குரிய ஆடை அணிவதை தான், அவர் இந்த ஆடை இல்லாவிட்டால் தன்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும் என்று குறிப்பிட்டார். தவறான எண்ணத்துடன் அவர் அப்படி சொல்லவில்லை” என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
shilpa shetty says not wear clothes yoga can be done
Leave a Reply
You must be logged in to post a comment.