shadow

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரிந்த சென்செக்ஸ்!

கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது

சற்றுமுன் மும்பை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 61040 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மும்பை பங்குச் சந்தை இன்று சரிந்தாலும் வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.